Saturday, May 21, 2011

கவிதை

**** காதல் சுகமானதா? வலியானதா? ****
சுகம் தந்த போது ஏற்றுக்கொண்டேன்;
என் மனம் மகிழ்ந்தது,
நானே காற்றினில் பறப்பதாய் தோன்றியது,
என்னை நானே அழகாய் கண்டேன்,
தூங்கும் போதும் உன்னையே கனவினில் கண்டேன்,
நிமிடம் தவறாமல் உன்னை நினைத்தேன்,

இப்படி காதலித்த பெண்ணை சந்தேகம் என்ற ஒரே வார்த்தையில் கொன்றாய்;
பிரிவு மட்டுமே தந்தாய்,
உணர்ச்சியை கொலை செய்தாய்,
பாசத்தை பொய் என்றாய்,
அன்பை வேஷம் என்றாய்,
மொத்தத்திலதென்னை வெறுத்து
பைத்தியம் போல் புலம்பவிட்டாய்!!!!!!!

1 comment:

  1. வலிதருவது தங்கள் கவிதை ஆயினும்
    வரிகள் தொடுத்தவிதம் அருமை சகோ .....

    ReplyDelete